×

குரூப்-1 தேர்வு: 50 சதவீதம் பேர் எழுதினர் கண் கலங்கி கெஞ்சிய தேர்வர்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர் வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. இதற்காக 9.15 மணிக்கே தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்குப்பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. நேற்று கடலூர் மாவட்டம் தொழுதூர் வேப் பூர் பகுதியிலிருந்து வந்த தேர்வர்கள் சிலர், துறையூர் மெயின்ரோடு, பெரம்பலூ ர் அரசு மேல்நிலைப்பள்ளி என்ற தேர்வு மைய முகவரிக்கு பதில் துறையூருக்கே சென்றுவிட்டு மணி 10.45க் கு வந்தபோது அவர்களை வருவாய்த்துறை, காவல் து றையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் முகவரி மாறிச் சென்றதைக்கூ றி கண் கலங்கி கெஞ்சிக் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அவர்களை சமாதானம் சொல்லி அடுத்தாண்டு எழுதும்படி யோசனை சொல்லி வருவாய்த்துறையின ர் அனுப்பி வைத்தனர். கண் பார்வை இல்லாத நிலையில் விண்ணப்பித்த தேர்வர் ஒருவர் சொல்வதை எழுத சிறப்பாசிரியர் நியமிக்கப்பட்டும், தேர்வர் வராததால் சம்பந்தப்பட்ட சிறப்பாசிரியர் அந்தத் தேர் வறையில் வினாத்தாளுட ன் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : beggars ,
× RELATED இந்தியாவில் 4.13 லட்சம்...