×

மின்வாரியம் சார்பாக தா.பழூரில் ஒலிபெருக்கியில் மக்களுக்கு விழிப்புணர்வு

தா.பழூர், ஜன.4:அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தா.பழூர்உதவி மின் பொறியாளர் இளையராஜா (இயக்கலும் காத்தலும்) தலைமையில் தா.பழூர் பிரிவு பகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின் வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றி தன்னிச்சையாக இயக்கக் கூடாது. மின்கம்பத்தில் இழுவை கம்பிகளில் ஆடு மாடுகளை கட்டக்கூடாது. மேலும் மின் சாதனங்களால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

Tags : Dhaka ,Electricity Board ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி