×

தரங்கம்பாடி அருகே சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள்

தரங்கம்பாடி, ஜன.4: தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாய்ந்து நிற்பதால் அசம்பாவிதங்கள் நிகழும் முன் அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி திருமெய்ஞானம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள மின்கம்பங்கள் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மின்கம்பம் சாய்ந்து ஆபத்தை அசம்பாவிதங்கள் ஏற்படுத்தும் முன்னர் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களை மாற்றி சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...