×

பெருந்தோட்டத்தில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சீர்காழி, ஜன. 4: சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சீர்காழி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்து தேவேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், ஒன்றிய பொருளாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் முன்னிலையில், 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : parties ,plantation ,DMK ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...