×

வேதாரண்யம் பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹரசதுர்த்தி விழா

வேதாரண்யம், ஜன.4: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர்சுவாமி கோயில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோயில், வேதாரண்யம் கோயிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்தும் வழிபட்டனர்.

Tags : festival ,Sangadaharasathurthi ,area ,Ganesha temples ,Vedaranyam ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...