×

1548 ேபர் ஆப்சென்ட் கேரளாவில் இருந்து கரூருக்கு வந்து குவிந்த அன்னாசி பழங்கள்

கரூர், ஜன.4:கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட அன்னாசி பழங்கள் கரூர் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் வண்டிபெரியார் மற்றும் கோட்டயம், கொல்லம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநில தேவைக்கு பிறகு பெரும்பாலான அன்னாசி பழங்கள் தமிழக பகுதிக்கு வியாபாரிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கேரள மாநில பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள அன்னாசி பழங்கள் கிலோ ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மருத்துவ குணங்கள் மிகுந்த பழங்களில் இந்த பழமும் ஒன்று என்பதால் கரூர் நகர மக்களும் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kerala ,Karur ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...