×

விரிஞ்சிபுரம் ஆராய்ச்சி நிலையத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி

வேலூர், ஜன.1: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் விரிஞ்சிபுரத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் பயிருக்கு நவீன தண்ணீர் பாசனம், மக்காச்சோளம் படைப்புழு மேலாண்மை, காய்கறி பயிர்களில் சொட்டுநீர் பாசனம் மற்றும் நஞ்சில்லா காய்கறி சாகுபடி பற்றிய பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிறைவு நாளான 29ம் தேதி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பணி செய்பவர்களுக்கு குப்பைகள் பிரித்தெடுப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். இதில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர், கால்நடை மருத்துவர், மண்வள தொழில்நுட்ப மற்றும் திட்ட உதவியாளர் கலந்துகொண்டனர்.

Tags : Virinjipuram Research Station ,
× RELATED வேலூர், காட்பாடியில் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை