×

கலெக்டர் உத்தரவு முதல்வருக்கு வீரவாள் வழங்கிய அமைச்சர் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க கோரி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை, ஜன.1: தமிழக முதல்வர் மணப்பாறைக்கு வந்ததையொட்டி, மதிமுகவினர் மணப்பாறைக்கு அரசு கலை கல்லூரி வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணப்பாறை காமராஜர் சிலையருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேண்டும், வேண்டும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். உடனடியாக மணப்பாறையில் அரசு கல்லூரி அமைத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி துணைச் செயலாளர் துரைராஜ், நகர செயலாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் வின்சென்ட் வேதராஜ், பொன்னுச்சாமி, சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் பால்சாமி, பொருளாளர் வைகோ பழனிசாமி, மகளிரணி அமைப்பாளர் ரேணுகாதேவி, துணை அமைப்பாளர் பாத்திமா, மணிகண்டம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருமாவளவன், பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன், வக்கீல் தமிழ்மணி ஆகியோர் பேசினர். கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Demonstration ,Manapparai ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்