×

எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கம்

திருத்துறைப்பூண்டி, ஜன.1: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து இடையூர் வழியாக மாங்குடி வரை செல்லும் பேருந்து கொரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொது அரசு ஓரளவு தளர்வுகளை அறிவித்துள்ளதால் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து இடையூர் வழியாக மாங்குடி சென்று வந்த பேருந்து இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நகருக்குள் வந்து செல்வது இயலாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ ஆடலரசனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அரசு போக்குவரத்து கிளை மேலாளரை சந்தித்து எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உடனே பேருந்து இயக்கப்பட்டது. அதில் எம்எல்ஏ ஆடலரசன் பயணம் செய்து மாங்குடி வரை சென்று கடைத்தெருவில் இறங்கி அங்கு நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags : MLA ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்