×

அஸ்வின்ஸ் கேக் திருவிழா பெரம்பலூரில் சென்டர் மீடியனில் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே கவிழ்ந்தது

பெரம்பலூர், ஜன.1:திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழப்பெருங்காவலூர் கிராமம்,மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் விக்டோரியஸ் பிரபு (39). இவர் தனது உறவினர்களான தஞ்சை மாவட்டம், கும்பகோணம், மாவியம்பேட்டை , மாரியம்மன் கோவில் ரோடு, பாலகிருஷ்ணன் மகன் ராஜாராமன்(47), திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, விரகாலூர் தெற்குத் தெரு அமிர்தசாமி மகன் அந்தோணிசாமி(36), தஞ்சை மாவட்டம், கும்பகோண ம் அடுத்த சாக்கோட்டை இருதயசாமி மகன் மரியசெல்வம்(48)ஆகிய 4 பேரும் சொந்த வேலையாக சென் னை சென்று விட்டு, மீண்டும் ராஜாராமன் வண்டி ஓட்ட சொகுசு காரில் நால்வரும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

நேற்று (31ம்தேதி) காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறை மங்கலம் மேம்பாலம் இறக்கத்தில் வந்தபோது, சாலையில் தேங்கி நின்ற மழை நீர் கார்மீது தெளித்து கண்ணாடியை மறைத்ததால் காரை ஓட்டிய ராஜாராமனுக்கு முன்புற சாலை தெரியாமல்,வேகம்குறையாமல் சென்டர் மீடியனில் மோதிய கார் சென்டர் மீடியனையும் தாண்டி திருச்சி -சென்னை ரோட்டிற்கு வந் து உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயம்பட்ட அந்தோணி சாமி, மரியசெல்வம் இருவரும் பெரம்பலூர் அரசு பொ து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்தோணிசாமி வழியிலேயே இறந்தார். இது சம்பந்தமாக விக்டோரியஸ் பிரபு என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags : road ,Aswins Cake Festival Perambalur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...