×

வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பையுடன் பேரணி

கீழ்வேளூர், ஜன.1: வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி ஏர் கலப்பையுடன் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளின் விரோத வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஏர் கலப்பை பேரணி நேற்று கீழ்வேளூர் கடைத்தெருவில் நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு நாகை நடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமிர்தராஜ தலைமை தாங்கினார்.

வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சைய்யதுபிக்கின் , முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ், முன்னாள் வட்டார தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மதியழகன், கட்சியின் பேச்சாளர் தஞ்சை தமிழ்ச்செல்வம், திருவாரூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர். பின்னர் கட்சியினர் ஏர் கலப்பையுடன் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை அதே இடத்திலேயே தடுத்து நிறுத்தி 23 பெண்கள் உள்ளிடட 50 பேரை கைது செய்தனர்.

Tags : Congressmen ,
× RELATED சேரி மொழி பேச்சுக்கு வருத்தம்...