கரூர், ஜன.1: கரூர் நகராட்சி ராயனூர், பொன்நகர் வழியாக ஒத்தையூர், தாந்தோணிமலை, கரூர், திருச்சி பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான நான்கு ரோடுகள் பிரியும் இடத்தில் உள்ள பேரிகார்டுகள் அகற்றப்பட்டது. இதனால், திரும்பவும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியின் வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளதால் மீண்டும் பேரிகார்டு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.