×

கரூரில் பரபரப்பு 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கடவூர், ஜன.1: தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாமக சார்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கேட்டு கரூர் மாவட்டம் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் கீரனூர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழகர்சாமி முன்னிலை வகித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மணிவண்ணன், பழனிச்சாமி, பெருமாள், செந்தில், ஏழுமலை, திருப்பதி, முருசேன் மற்றும் சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...