×

குமரியில் சாரல் மழை

நாகர்கோவில், ஜன.1: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மதியம் முதல் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை பெய்திருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.55 அடியாகும். அணைக்கு 399 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 531 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.98 அடியாக இருந்தது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 404 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...