×

சிவகாசியில் 4 சக்கர வாகனங்களில் விபத்திற்கு காரணமான `பம்பர்கள்’ அகற்றம்

சிவகாசி, ஜன. 1: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக்கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017ல் உத்தரவிட்டது. ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க ‘கிராஷ் கார்டு’ எனப்படும் பம்பரை பொருத்துகின்றனர். அதேநேரம், சாலைவிபத்தின்போது உயிரிழக்க இந்த பம்பர்களும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. எனவே, விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சிவகாசியில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரி மூக்கன், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்  போக்குவரத்து துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  இதில் 8 வாகனங்களில் பம்பர் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Removal ,accident ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து