×

அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு காரியாபட்டி பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி, ஜன. 1:  காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் மகளிர் சுகாதார வளாகங்கள் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதுடன், இங்குள்ள கழிவுநீர் வடிகால்களையும் தூர்வாராமல் வைத்துள்ளனர். இப்பகுதி மக்களை புறக்கணிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காரியாபட்டி பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் கலைவேந்தன் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இனியவன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 15வது வார்டில் மகளிர் சுகாதார வளாகங்களை பயன்பாட்டு கொண்டு வர கோரியும், கழிவுநீர் வடிகால்களை தூர்வார கோரியும், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் 30 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Kariyapatti ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...