×

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

ராஜபாளையம், ஜன.1:  ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் துரைகற்பகராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கெதிரான பாலியல்  வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை திருமண தடைசட்டம்  தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்  சிவக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர்  ஜானகி, வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் பாண்டீஸ்வரன் செய்திருந்தார்.  

Tags : Child Protection Committee Meeting ,
× RELATED ஏர்வாடியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்