×

மயிலாடும்பாறை அருகே வாரச்சந்தை வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்

வருசநாடு, ஜன.1: மயிலாடும்பாறை அருகே வாரச்சந்தை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடும்பாறை அருகே 25க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒவ்வொரு நாளும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மயிலாடும்பாறை அருகே உள்ள பொன்நகர் கிராமத்தில் ஏற்கனவே வாரச்சந்தை அமைப்பது சம்பந்தமாக அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டு சென்றனர். எனவே விரைவில் வாரச்சந்தை அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து மலைகிராமத்தை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், தங்கம்மாள்புரம் ஊராட்சியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடமலைக்குண்டு, தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மிகவும் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே விரைவில் பொன்நகர் கிராமத்தில் வாரச்சந்தை அமைத்திட  தேனி மாவட்ட ஆட்சியர் உதவிட வேண்டும் என்றார்.


Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...