×

திமுக ஆட்சி அமைந்ததும் சக்கம்பட்டி உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக மாற்றப்படும் ஆண்டிபட்டி எம்எல்ஏ உறுதி

ஆண்டிபட்டி, ஜன.1: சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி திமுக ஆட்சியில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கிராம சபை கூட்டத்தில் பேசினார். ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்து மனுக்களாக எம்எல்ஏ.விடம் வழங்கினர்.கூட்டத்தில் சக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், ‘‘அடுத்து திமுக ஆட்சி வருவதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுமக்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும். அடுத்த திமுக ஆட்சியில் சக்கம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பொறுப்புக்குழு உறுப்பினர் சிங்காரவேலன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் புல்லட் மாயி, இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Andipatti MLA ,Chakkampatti High School ,DMK ,formation ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்