×

கட்டிட தொழிலாளி சாவு

போடி, ஜன.1:போடி அருகே பொட்டிபுரத்தை சேர்ந்தவர் ஜக்கையா(45). கட்டிட தொழிலாளி. இவர்  கருப்பசாமி கோயில் அருகில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கல் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக தூக்கி போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து போடி புறநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,construction worker ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...