×

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூர், ஜன. 1: தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமாரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:திருப்பூர் மாநகராட்சியில் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வரி அதிகமாக உள்ளது. மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக குப்பை வரி, சொத்து வரியுடன் சேர்த்து வசூல் செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி விதிப்பு அபராத தொகை அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும். பல இடங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை முறைப்படுத்தி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகரப் பகுதியில் குப்பைகள் முறையாக எடுக்காமல் ஆங்காங்கே மலைபோல் குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகரில் தெருவிளக்குகள் பல இடங்களில் சரிவர எரிவதில்லை. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பராமரிப்பு பணியை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சாலைகள் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் ஏற்பட்டால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tirupur Corporation ,
× RELATED வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ.3.22 கோடி...