×

கூகன்மூலா வனப்பகுதி ஓடையில் இறந்து கிடந்த ஆண் யானை

கூடலூர், ஜன.1: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா புல்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூகன்மூலா வனப்பகுதியில் உள்ள ஓடையில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனச்சரகர் ரஞ்சித் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்தனர். சுமார் 30 வயதுள்ள ஆண் யானை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.  கால்நடை மருத்துவர் அருண சக்காரியா அடங்கிய குழுவினர் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். இந்த யானை மற்ற யானைகளுடன் ஏற்பட்ட சண்டையில் காயமடைந்து இறந்திருக்கலாம் என்றும், தற்போது யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் பெண் யானைகளுடன் சேர்வதற்காக ஆண் யானைகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த யானை இருந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ள

Tags : forest stream ,Kuganmoola ,
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்