×

காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.1: ஈரோடு மணல் மேட்டில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தளபதி ரமேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வேண்டும். குளிர்காலக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சாமுவேல், ஒருங்கிணைப்பாளர்கள் விஜய், வேம்பு அரசன், துணைத்தலைவர் ஆரிப் அலி, செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Congress ,firebrand protest ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...