×

மாவட்டத்தில் 5.81 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவள்ளூர்:  திருவள்ளுர், நேதாஜி சாலை கூட்டுறவு நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்க தொகை மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில்  நடைபெற்றது. இணைப்பதிவாளர் பா.ஜெய  வரவேற்றார். கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பி.ஜெயபால், கூட்டுறவு தலைவர்கள் எஸ்.ஏ.நேசன், ஜி.கந்தசாமி முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோர்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்க தொகை மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கினர்.

 இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள்  பி.பலராமன், கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, துணை பதிவாளர்கள் அ.காத்தவராயன், செல்வி, சி.வி.கருணாகரன், வை.கண்ணன், மேலாண்மை இயக்குனர்கள் சு.வேல்முருகன், விஜய  வேலன், சார்பதிவாளர்கள் காத்தவராயன், கை.கு.சண்முகம், சுரேஷ்குமார், விஜய சரவணன், சாந்தி, கூட்டுறவு ஒன்றிய மேலாளர் எம்.ஆடலரசன், அதிமுக நிர்வாகிகள் கமாண்டோ ஏ.பாஸ்கரன், செவ்வை எம்.சம்பத்குமார், இ.கந்தசாமி,  கே.சுதாகர், ஒன்றியக்குழு தலைவர் பி.வெங்கட்ரமணா, வக்கீல் ஜி.சீதாராமன், சிற்றம் ஜெ.சீனிவாசன், வினோத் குமார் ஜெயின், கேபிஎம்.எழிலரசன், எஸ்.வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : rice family card holders ,Ministers ,district ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...