×

உத்திரமேரூர் அருகே திடீர் தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மின்சார வயர்கள் உரசியதால், ஏற்பட்ட தீப்பொறி விழுந்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசமானது. உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில், குடிசை வீட்டில் வசிப்பவர் ஆனந்தன். (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.  நேற்று மாலை நளினி அதே பகுதியில் உள்ள உறவினர்  வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார். ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தார்.அப்போது திடீரென வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின்வயர், ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி உருவாகி, ஆனந்தனின் குடிசை வீட்டில் விழுந்தது. இதில், தீ மளமளவென பரவியது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குடிசையில்  இருந்த ஆனந்தனை மீட்டனர்.தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பல மணிநேரம் போராடி தீயை அனைத்தனர். அதற்குள் குடிசை, அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. புகாரின்படி  உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Cottage ,Uttiramerur ,fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா