×

சாத்தான்குளத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

சாத்தான்குளம், டிச.31: சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெற்குதெருவில் பேருராட்சி மீன் கடைக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஒருவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று அங்கு டவர் அமைப்பதற்கான ஆய்த்தப்பணியில் ஈடுப்பட்டனர். இதனையறிந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதால் மக்களுக்கு பின் விளைவுகள் ஏற்பட கூடும். இதனால் அங்கு டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தனர். இருப்பினும் செல்போன் நிறுவனம், தனிநபருக்கு சொந்தமான காம்பவுண்டுக்குள் டவர் அமைக்க ஏற்பாடு செய்து முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து பொதுமக்கள் டவர் அமைக்கப்படும் இடத்தில் திடீரென திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மீறி அங்கு டவர் அமைக்க முற்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், டவர் அமைத்தால் உயிருக்கு அச்சுறுத்தல், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் செல்போன் நிறுவனம் இங்கு டவர் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து கலெக்டர், சாத்தான்குளம் தாசில்தாருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Tags : cell phone tower ,Sathankulam ,area ,
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...