×

புதியம்புத்தூரில் திமுக கிராம சபை கூட்டம்

ஓட்டப்பிடாரம், டிச. 31: புதியம்புத்தூரில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், தெய்வராணி முன்னிலை வகித்தனர்.  சண்முகையா எம்எல்ஏ பேசுகையில், திமுக ஆட்சியின்போது மக்கள் அடைந்த பயன்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கையும் மக்களுக்காக போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளாத நிலை குறித்தும் பேசினார். பின்னர் பெண்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் பகுதியின் அடிப்படை பிரச்னைகளை தெரிவித்து எம்எல்ஏவிடம் மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் செயலாளர்கள் லிங்கராஜ், சற்குணபாண்டி, பூவலிங்கம், தங்கவேல்சாமி, சரவணன், ஞானதுரை, முன்னாள் கவுன்சிலர் சிவன், முன்னாள் பஞ்.தலைவர் முத்துக்குமார், மகளிரணி ஜெயா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவரணி மாடசாமி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : DMK ,meeting ,Grama Niladhari ,Puthiyambuthur ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்