×

மாற்று கட்சியினர் பாஜவில் இணைந்தனர்

தூத்துக்குடி, டிச. 31: தூத்துக்குடியில் மாற்றுகட்சிகளில் இருந்து விலகியவர்கள் பாஜவில் இணைந்தனர். தூத்துக்குடியில் மாற்றுகட்சிகளில் இருந்து விலகிய 100 பேர் பாலகணேசன் தலைமையில் பாஜவில் இணைந்தனர். மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல தலைவர் கனகராஜ், மாவட்ட வணிக பிரிவு செயலாளர் பழனிவேல், பிற்பட்டோர் பிரிவு மாவட்ட பொதுசெயலாளர் கமலகண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் வக்கீல் வாரியர், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் செல்லப்பா, நிர்வாகிகள் பாக்கியம், முருகன் மற்றும் புதிதாக இணைந்த இளைஞர்கள் கிருபாசங்கர், திருமால், ஆறுமுகம், ஆனந்த் உள்ளிட்ட செல்வநாயகபுரம், அழகேசபுரத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

Tags : Alternative parties ,BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...