×

இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி வந்த 33 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்றில்லை

தூத்துக்குடி, டிச.31: இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வந்த 33பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து, கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த 33 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் யாருக்கும் அந்த தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : England ,Thoothukudi ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது