×

தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

புளியங்குடி, டிச. 31:  புளியங்குடியை சேர்ந்தவர் தங்கமாரியப்பன் (40). அங்குள்ள தனியார் பள்ளி தலைமையாசிரியரான  இவர், கடந்த 26ம்தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டு கீழ்த்தளத்தில் தூங்கினார். நள்ளிரவில் புகுந்த மர்மநபர், மாடி அறையில் பீரோவில் இருந்த 6 பவுன்  திருடிச்சென்றார். புகாரின்பேரில் புளியங்குடி எஸ்.ஐ. காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர், கடந்த 28ம்தேதி இரவு தென்காசி பஸ்நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவவை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் புளியங்குடி பகலமுடையான் தெருவை சேர்ந்த சுந்தரேசன் மகன் சூரியகாந்தி (20) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் புளியங்குடியில் தங்கமாரியப்பன் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியதும் அம்பலமானது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் திருடுபோன நகைகளை மீட்டனர்.

Tags : jewelery ,house ,headmaster ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை