×

ஆடு திருட முயன்றவருக்கு மக்கள் தர்ம அடி

மணப்பாறை, டிச.31: மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பட்டியில் கட்டியிருந்த ஆடுகள், மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் பல திருடப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று துவங்குறிச்சியில் மர்ம நபர் ஒருவர் ஆடு திருட முயன்றபோது அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.  தகவலறிந்த மக்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். பிடிபட்ட நபரை கைது செய்து திருடப்பட்ட ஆடுகளை மீட்டு தர வலியுறுத்தி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : someone ,
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...