×

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, டிச.31: அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழ ங்க வேண்டுமென தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ரெத்தினமாலா தலைமையில் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் டெய்சி, அறிக்கைகளை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது ஒட்டுமொத்தப் பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 20, 21 தேதிகளில் வட்டார அளவிலும், 29ம் தேதி மாவட்ட அளவிலும், பிப்ரவரி 5ம் தேதி மாநில அளவிலும் போராட்டங்களை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்