×

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை,டிச.31: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் அகஸ்டின்அற்புதராஜ் தலைமை வகித்தார். வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொகுதி செயலாளர் ஆதித்தன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamils ,withdrawal ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!