×

பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.25 லட்சத்தில் மீன் உலர் களம் கட்டும் பணி துவக்கம்

கொள்ளிடம், டிச.31: கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மீன் உலர் களம் கட்டும் பணி துவக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மீன் உலர் களம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பாரதி தலைமை தாங்கி செங்கல்லை எடுத்து வைத்து கட்டும் பணியை துவக்கி வைத்தார். கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நற்குணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் இனியன், பிடிஓ ஜான்சன், ஒன்றிய பொறியாளர் பிரதீஷ்குமார், புதுப்பட்டினம் வர்த்தக சங்கத் தலைவர் குபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுப்பட்டினம் கடைவீதியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பஸ் நிறுத்த கட்டிடம், புதியதாக கட்டப்பட்ட பொது கழிவறை கட்டிடம், ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட மீன் விற்பனை கூடம், தாண்டவன்குளம் கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை ஆகிய கட்டிடங்களையும் சீர்காழி எம்எல்ஏ பாரதி திறந்து வைத்தார்.

Tags : Dry Fish Farm ,Palaiyaru Fishing Port Complex ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு