×

கலெக்டர் தலைமையில் நடந்தது வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் 3ம் தேதி திமுக மக்கள்சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கரூர், டிச. 31: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் ஜனவரி 3ம்தேதி நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளதாக மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர் கேசி பழனிசாமி,  மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி உட்பட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர், மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில்  நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக, ஜனவரி 3ம்தேதி காலை மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்குசாலையில் 11.30மணியளவில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, திருக்காம்புலியூர் ரவுண்டானா, கரூர் ரெசிடென்ஸி ஹோட்டல் பகுதி, கரூர் பேரூந்து நிலைய ரவுண்டானா, வெங்கமேடு அண்ணாசிலை, மண்மங்கலம் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் மாவட்ட திமுக மற்றும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் சார்பில வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, மாலை 4மணியளவில் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பாலம்மாள்புரம், திருமாநிலையூர் ரவுண்டனா, காந்திகிராமம் டபுள்டேங்க், புலியூர் கடைவீதி, கிருஷ்ணராயபுரம் கடைவீதி, குளித்தலை ஆகிய பகுதிகளிலும் திமுக தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில், அனைத்து நிர்வாகிகளும், திமுகவினர்களும் கலந்து கொள்கின்றனர் என்றார்.

Tags : Stalin ,meeting ,DMK ,Vangal Kuppichipalayam ,Lok Sabha ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...