×

புது மாப்பிள்ளை தற்கொலை

சிவகாசி, டிச.31: சிவகாசி அருகே திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார். சிவகாசி அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் குருராஜ்(29). இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியில் காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குருராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ