×

போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு

சிவகாசி, டிச.31: சிவகாசி அருகே ரயில்வே போலீஸ்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிவகாசி அருகே கட்டளைப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பிரபு(32). மதுரையில் ரயில்வே போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் விபத்து ஒன்றில் சிக்கியதால் விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரனேரி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...