×

சிவகாசியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளுக்கு அபராதம் சப்கலெக்டர் எச்சரிக்கை

சிவகாசி, டிச. 31: சிவகாசி சப்கலெக்டர் தினேஸ்குமார் அறிக்கை: சிவகாசி- திருத்தங்கல் சாலையில் 15 மாடுகள் சுற்றி திரிந்தது. இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள காலியிடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
மாடுகளின் உரிமையாளர்கள் அபராத தொகை ரூ.5 ஆயிரத்தை ஆனையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செலுத்தி விட்டு சிவகாசி தாசில்தாரிடம் இனிமேல் மாடுகளை சாலையில் சுற்றி திரிய விடமாட்டோம், அப்படி சுற்றி திரிந்தால் மதுரை அழகர்கோவில் கோசாலையில் மாடுகளை ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்கிறோம் என்று உறுதிமொழி அளித்து தங்களது மாடுகளை அழைத்து செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உரிமை கோராத மாடுகள் மதுரை அழகர்கோவில் கோசாலையில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivakasi ,road ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து