தேனி, டிச.31 : திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆண்டிபட்டியில் மறியல் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதனை கண்டித்து ஆண்டிபட்டியில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் வைகை சாலை பிரிவில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் ஒன்றிய தலைவர் கண்ணன், நகர தலைவர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.