தேவதானப்பட்டி, டிச.31: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. சில்வார்பட்டியில் பழமையான முனையடுவ நாயனார் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்று, பின்னர் விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமியம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஷ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, துர்கை, லிங்கோத்பவர், உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, மஞ்சள்பொடி, திருமஞ்சனதிரவியம், மாபொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. நடராஜர், சிவகாமியம்மாள், மாணிக்கவாசகர் சப்பரத்தில், திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.