×

திருப்புத்தூர் அருகே 75 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்புத்தூர், டிச.31: திருப்புத்தூர் அருகே கீழச்சீவல்பட்டி அச்சரம்பட்டி விலக்கு பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில ஈடுப்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மலம்பட்டியை சேர்ந்த பழனியப்பன்(66) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் டூவிலரில் வைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று பி.அழகாபுரியை சேர்ந்த ரவிச்சந்திரன்(37) கீழச்சிவல்பட்டி கால்வாய் வீதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்