×

வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா சோதனை

தேவகோட்டை, டிச.31: வெளிநாடுகளில் இருந்து இந்த வாரம் திரும்பியவர்கள் 31 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் யாருக்காவது புதிய வகை கொரோனா உள்ளதா? என்ற விபரத்தை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தேவகோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 18 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று முன்தினம் தேவகோட்டை நகராட்சி அலுவலக சுகாதாரத்துறைக்கு வெளிநாடுகளில் இருந்து தேவகோட்டைக்கு வந்தவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.  மொத்தம் 31 பேர் தற்போது வந்திருக்கின்றனர். அவர்களுக்கு புதிய வகை கொரோனா சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் தேவகோட்டை நகரில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அரசு மருத்துவமனைக்கோ அல்லது ஆரம்ப சுகாதார மையத்திற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என தேவகோட்டை நகராட்சி அலுவலக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...