பரமக்குடி, டிச.31: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.2ம் தேதி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஜன.2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து, விமானம் மூலம் மதுரை வரும் அவர், அன்று காலை 9 மணிக்கு பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூரில் உள்ள கேஎஸ்டி மஹாலில் கால்நடை வளர்ப்பு மக்களுடன் கலந்துரையாடிகிறார். பின்பு, 10.15 மணி முதல் 11 மணி வரை தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில், வேளாண்மை மற்றும் விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடல், 11.15 மணி முதல் 12 மணி வரை, பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உள்ள லேனா திருமண மஹாலில், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் ஆயிரவைசிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.
பின்பு மதியம் 12.45 மணி முதல் 1.30 மணி வரை திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பட்டினம்காத்தான் பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல், 1.45 மணி முதல் 3 மணி வரை, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில் இஸ்லாமிய ஜமாத் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார்.
மூன்று முப்பது மணி முதல் நான்கு 15 மணி வரை ராமநாதபுரம் நகரில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்கிறார். 4.45 மணி முதல் 5.30 மணி வரை திருப்புல்லாணியில் மீனவ மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் செய்கிறார். மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடியில் மரக்கறி மற்றும் ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்துரையாடல், தொடர்ந்து 7.15 முதல் 8 மணி வரை சாயல்குடியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் 8.30 மணி முதல் 9 மணி வரை கன்னிராஜபுரம் பகுதியில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோரது ஏற்பாட்டில் மறிச்சுக்கட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பார்த்திபனூரில் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.