ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம், ராமச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கோட்டை உலிமங்களம் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்களுக்கு 1997ம் ஆண்டு அரசு 27 குடும்பங்களுக்கு 1.3 ஏக்கர் வீட்டுமனை பட்டா வழங்கியது. இந்த இடத்தை மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.