×

காஷ்மீர் முதல் குமரி வரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சைக்கிள் பேரணி

தர்மபுரி, டிச.31: இந்திய எல்லை பாதுகாப்பு படையில் சேரும்படி, இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 30 பேர் சைக்கிள் பேரணி மேற் கொண்டுள்ளனர். காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கினர். நேற்று முன்தினம் மாலை பெங்களூரு வழியாக தர்மபுரிக்கு வந்தனர். அவர்களை தர்மபுரி எஸ்பி பிரவேஸ்குமார் உத்தரவின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வரவேற்றார். அவர்கள் இரவு தங்கியிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, மதுரை சென்று சேர்ந்தனர்.

Tags : Border Security Force Cycle Rally ,Kashmir ,Kumari ,
× RELATED காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது : பிரதமர் மோடி