×

அனைத்து ஓட்டல்களில் மதுக்கூடங்கள் மூட வேண்டும்: கலெக்டர் தகவல்'

வேலூர், டிச.31: புத்தாண்டையொட்டி இன்று இரவு 10 மணிக்கு அனைத்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மூட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஓட்டல்களிலும் உள்ள மதுக்கூடங்களில் இன்று இரவு விழா கொண்டாட்டத்திற்கு தடை விதித்து உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்எல்3 ஸ்டார் ஓட்டல் மற்றும் ஸ்டார் ஓட்டல் அல்லாதவற்றில் இயங்கும் மதுக்கூடங்கள் இன்று 10 மணிக்கு கட்டாயமாக மூடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும், கேளிக்கை நிகழ்ச்சி நடப்பதாக தெரியவந்தாலும், மதுக்கூடத்தின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags : hotels ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்