×

பனியில் கருகாமல் இருக்க மலர் செடிகளுக்கு பாதுகாப்பு

ஊட்டி, டிச.31: ஊட்டியில் 2021 மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் நாற்று நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால் மலர் செடிகள் கருகும் நிலை உருவாகியுள்ளது.

மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கப்பட்டு வருகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தண்ணீர் பாய்ச்சி மலர் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். புல் மைதானங்களும் கருகாமல் இருக்கு பாப் அப் முறையில் காலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதே போன்று தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் நர்சரிகளில் நாற்றுக்கள் கருகாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வைகள் மற்றும் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு நாற்றுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...