×

பழனி முருகன் கோயிலுக்கு நாட்டு சர்க்கரை விற்பனை செய்ய அழைப்பு

ஈரோடு, டிச.31: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் நாட்டு சர்க்கரை விற்பனை செய்ய உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோயிலில் பஞ்சாமிர்தம் உற்பத்திக்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கோயில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் நாட்டு சர்க்கரையை கவுந்தப்பாடி விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன் அடைய வேண்டும் என விற்பனை கூட கண்காணிப்பாளர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், விவரங்களுக்கு 99445-23556, 0425-6240383 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palani Murugan Temple ,
× RELATED கோயிலில் உழவார பணி