×

திருச்சியில் போராட்டம் அய்யாக்கண்ணு, பரதன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, டிச.30: சீர்மரபினருக்கு ஒரே சான்று வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞரணி தலைவர் பரதன் உள்பட 250 பேர் மீது கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Bharathan ,Trichy Ayyakkannu ,
× RELATED மீண்டும் வெளியாகும் ரதி நிர்வேதம்