×

அமைச்சர் காமராஜ் பேட்டி நன்னிலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருவாரூர், டிச.30: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணை குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் வேலாயுதம் (45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் வீட்டில் மனைவி செந்தாமரைச்செல்வி (38) மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தாமரைச் செல்வி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று காலை வீடு திறந்து கிடப்பதாக எதிர் வீட்டில் வசிப்பவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததையடுத்து வெளியூர் சென்ற செந்தாமரைச் செல்வி மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நன்னிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவு செய்தனர். மேலும், கொள்ளை போன நகை மற்றும் பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kamaraj Patti ,house ,Nannilam ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்